tag:blogger.com,1999:blog-72146672024-03-08T06:06:26.302+05:30Kumaraessஅறிந்ததும் அறியாததும்குமரேஸ்http://www.blogger.com/profile/17707575057941676604noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-7214667.post-1142916972852625872006-03-21T10:17:00.000+05:302007-04-17T00:10:20.026+05:30முகமூடிகளை நீக்கினால் ஆனந்தம்நாம் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு முகம் இருக்கும். ஒவ்வொரு முகமும் ஒவ்வொருவிதமாக இருக்கும். முகத்திற்கு முகம் வேறுபாடு இருக்கும்.<br /><br />நாம் எல்லோருமே முகமூடி அணிந்த மனிதர்கள் என்பார் ஒரு ஞானி.முகமூடிக்கு உள்ளே அன்பான, ஆனந்தமான உள்ளம் உள்ளது.<br /><br />ஆனால் நாம் என்ன செய்கிறோம்?<br /><br />நம்முடைய ஆனந்தமான, அன்பான முகத்தைக் காட்டாமல், நம்முடைய முகமூடியை மட்டும்மே வெளி உலகத்திற்கு தெரியும்படி வைத்திருக்கிறோம். <br /><br />முகமூடியை நாம் கழற்றிவிட்டால், அற்புதமான ஞானம் நம்மிடையே புதைந்நிருப்பதை நாம் உணர்வோம்.<br /><br />இந்தப் பிரபஞ்சத்தில் எத்தனையோ உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அமீபா, புல், பூண்டு, செடி, கொடி, மரம், வண்டு, பூச்சி, ஊர்வன, பறப்பன, நீர்வாழ் உயிரினம், கால்நடை என்று பலவகை உயிரினங்கள் உள்ளன. இவற்றுள் மனிதனாக வாழ நமக்கு அதிர்ஸ்டம் கிடைத்துள்ளது. நமக்கு மேலே உள்ள, நமக்கு புரிபடாத சக்தி, நம்மை மனிதனாக வாழ அனுமதித்துள்ளது.<br /><br />இந்த வாய்ப்புக்குக் காரணம் நாம் இந்த வாழ்கையில் ஆனந்தமாக வாழ்வதற்கும், பிறரை ஆனந்தமாக வாழ வைப்பதற்கும்தான்.<br /><br />ஆனால் எங்கே தவறு நடக்கிறது?<br /><br />நம்முடைய இயல்பான முகத்தை மற்றவர்களுக்கு காட்ட மறுக்கிறோம்.<br /><br />நமக்கு நாமே முகமூடி போட்டுக் கொள்கிறோம்.<br /><br />'சூபி' இலக்கியத்தில் 'முல்லா கதைகள்' மிகப் பிரபலமானவை.<br /><br />ஒவ்வொரு மனிதனின் மனநிலையின் அடிப்படையில் முல்லா கதைகள் அமைக்கப்பட்டிருக்கும்.<br /><br />ஒரு முறை நாட்டின் அரசர் முல்லாவின் கிராமம் வழியாகச் செல்வதற்கு நேர்ந்தது.<br /><br />அந்தக் கிராமத்தின் சார்பாக யாராவது ஒருவரிடம் பேச ஆசைப்பட்டார் அரசர்.<br /><br />முல்லா வாழ்ந்த கிராமத்தில் அவர் மட்டுமே எழுதப் படிக்கத் தெரிந்தவர். இதன்காரணமாக முல்லாவை அரசரிடம் பேச தேர்ந்தெடுத்தனர் கிராம மக்கள்.<br /><br />ஆனால் முல்லாவிற்கு சிறிது தயக்கம் இருந்தது. <br /><br />'அரசரிடம் நான் எப்படிப் பேசுவது? அவர் அரசர், நான் இந்நாட்டு சாதாரண கிராமத்து மனிதன்'<br /><br />இதற்கு அரண்மனை ஆலோசகர்கள் ஆலோசனை கூறினர்.<br /><br />'அரசர் என்னென்ன கேள்விகள் கேட்பார் என்பது எங்களுக்குத் தெரியும். அந்தக் கேள்விகளுக்கு நீங்கள் என்ன பதில் கூற வேண்டும் என்பதை நாங்கள் உங்களிடம் கூறி விடுகிறோம், அதன்படி நீங்கள் பதில் சொன்னால் போதும்'<br /><br />அரண்மனை ஆலோசகர்களின் யோசனையை முல்லா ஒத்துக்கொண்டார்.<br /><br />அரண்மனை ஆலோசகர்கள் "அரசர் கேட்கப்போகும் கேள்விகளுக்கு பதில் எப்படிச் சொல்வது?" என்பதற்கான வகுப்பினை நடத்தினர்.<br /><br />"முல்லா, அரசர் உங்களிடம் முதல் கேள்வியாக தாங்கள் எத்தனை வருடங்களாகத் தியானம் செய்து கொண்டு வருகிறீர்கள்?" என்று கேட்பார். அதற்குத் தாங்கள் 15 வரிடங்களாக என்று கூறவேண்டும், சரியா?"<br /><br /><br />"முதல் கேள்விக்கு 15 வருடங்கள் என்று பதில் சொல்லவேண்டும், அவ்வளவுதானே! சரி, அடுத்த கேள்வி என்ன?"<br /><br /><br />"இரண்டாவது கேள்வியாகத் தங்களுக்கு எத்தனை வயது?" என்று கேட்கப்படும். அதற்குத் தாங்கள் 60 வருடங்கள் என்று பதில் சொல்ல வேண்டும், சரியா முல்லா"<br /><br /><br />"இரண்டாவது கேள்விக்கு 60 வருடங்கள் என்று பதில் சொல்ல வேண்டும், சரி எனக்கு ஒரு சந்தேகம்?"<br /><br /><br />"கேளுங்கள்"<br /><br /><br />"எனக்கு வகுப்பு எடுத்தது போலவே அரசரிடமும் கூறிவிட்டீர்களா?"<br /><br /><br />"கூறிவிட்டோம், இந்தக்கிராமம் ஏழைகள் நிறைந்த கிராமம், யாருக்கும் எழுதப் படிக்கத் தெரியாது. முல்லாவிற்கு மட்டுமே ஒரளவு தெரியும். எனவே இந்தக் கேள்விகளை மட்டுமே கேட்க வேண்டும் எனவும், இந்த வரிசையில் மட்டுமே இரண்டு கேள்விகளை கேட்க <br />வேண்டும் எனவும் அரசரிடம் கூறிவிட்டோம். நீங்கள் கவலைப்படவேண்டியதில்லை"<br /><br />அரண்மனை ஆலோசகர்கள் கூறியபடியே முல்லா செயற்படுவது என்று முடிவு செய்தார்.<br /><br />அதைப் போலவே அரசரிடமும் இது குறித்து விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.<br /><br />அரசரும் அவ்வூருக்கு வந்தார்.<br /><br />ஆலோசகர்கள் சொன்ன கேள்விகளை அரசர் ஞாபகத்தில் வைத்திருந்தார், ஆனால் எந்தக் கேள்வியை முதலில் கேட்பது என்பதை மறந்து விட்டார். அருகில் உள்ள ஆலோசகர்களைக் கேட்க மனதினுள் அகங்காரம் தடை போட்டது.<br /><br />"முல்லா உங்கள் வயது என்ன?"<br /><br />இங்குதான் பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது, இரண்டாவதாக கேட்க வேண்டிய கேள்வியை அரசர் முதல் கேள்வியாகக் கேட்டு விட்டார்.<br /><br />முல்லாவோ முதல் கேள்விக்கு 15 வருடங்கள், இரண்டாவது கேள்விக்கு 60 வருடங்கள் என மட்டமே ஞாபகத்தில் வைத்திருந்தார்.<br /><br />"15 வருடங்கள்"<br /><br />முதல் கேள்விக்கு முல்லா பதில் சொல்லிவிட்டார்.<br /><br />அரசருக்கு தலை சுற்றியது! பார்ப்பதற்கு 60 வயதானவராகத் தோன்றுகிறார்! ஆனால் 15 வருடங்கள் என்கிறாரே! அரசருக்கு ஒன்றும் புரியவில்லை!<br /><br />இரண்டாவது கேள்வியை கேட்டார்.<br /><br />"முல்லா, தாங்கள் எத்தனை வருடங்களாகத் தியானம் செய்துகொண்டிருக்கிறீர்கள்?"<br /><br />முல்லாவிடம் இருந்து உடனடியாக பதில் வந்தது.<br /><br />"60 வருடங்கள்"<br /><br />அரசருக்கு குழப்பம் அதிகமாகிவிட்டது.<br /><br />"முல்லா, உங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா?"<br /><br />"நிச்சயமாக எனக்கு இல்லை அரசே! உங்களுக்குத்தான் என்று நினைக்கிறேன்"<br /><br />"என்ன சொல்கிறீர்கள்?" அரசர் வெகுண்டெழுந்தார்.<br /><br />"அரசே! எனக்கு எந்த வரிசையில் பதில்கள் சொல்லப்பட்டனவோ, அதே வரிசையில்தான் உங்களுக்கு கேள்விகளும் சொல்லப்பட்டிருக்கும். ஆனால் நீங்கள் அதன்படி கேட்காமல் மாற்றிக் கேட்டுவிட்டதை இப்போது உணர்கிறேன். தவறு செய்தது நானல்ல, எனக்கு என்ன சொல்லிக் கொடுக்கப்பட்டதோ, அதன்படியே நான் நடந்துள்ளேன். நீங்கள்தான் மாற்றி நடந்துவிட்டீர்கள். <br />எனவேதான் எல்லாக் குழப்பமும் நடந்துவிட்டது!"<br /><br />அரசர் திகைத்தார்முல்லா சொல்வதைப் பார்த்தால் மிகச் சிறந்த ஞானி போலத் தெரிகிறது. நான் மாற்றிக் கேள்விகள் கேட்டிருந்தாலும், பதில்களைச் சரியாகச் சொல்லியிருக்கலாமே!<br /><br />"முல்லாவே! தங்களுடைய விளக்கம் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. தாங்கள் கூறியது போலவே, நான் கேள்விகளை மாற்றிக்கேட்டிருக்கலாம்,தாங்கள் அதற்குச் சரியான பதில்களைக் கூறியிருக்கலாம் அல்லவா? ஏன் கிளிப் பிள்ளை போல் பதிலைத் தந்தீர்கள்?" <br /><br />"எனக்குக் கொடுக்கப்பட்ட அறிவுரை அப்படி! இப்போது நாம் இருவரும் ஒன்று செய்யலாம். நாம் இருவரும் கூடிப் பேச வேண்டும். இந்த கிராமத்தைப் பற்றிப் பேச வேண்டும் அவ்வளவுதானே"<br /><br />"ஆமாம் முல்லா! அதற்காகத்தான் நான் வந்துள்ளேன்"<br /><br />"அப்படியானால், நாம் இருவரும் நம் முகமூடிகளைக் கழற்றிவிடவேண்டும்"<br /><br />"முகமூடிகளா!"<br /><br />"ஆமாம், தாங்கள் அரசர் என்ற முகமூடியை அணிந்துள்ளீர்கள், நானோ 'புத்திசாலி'என்ற முகமூடியை அணிந்துள்ளேன்! இருவரும் ஏதோ ஒருவித முகமூடிகளை அணிந்துள்ளோம். அந்த முகமூடிகளை நாம் கழற்றிவிடுவோம். நான் இந்த கிராமத்தை சேர்ந்த மனிதன். <br />தாங்கள் வேறு கிராமத்தைச் சேர்ந்தவர். இந்த முறையில் மனம்விட்டு வெளிப்படையாக இயல்பாகப் பேசுவோம். எல்லாப் பிரச்சனைகளும் தீர்க்கப்படும். முகமூடிகளை அணிந்துள்ளவரையில் பிரச்சனைகளும், சங்கடங்களும், இடைஞ்சல்களும் தீர்க்கப்படாது, <br />வளர்ந்துகொண்டுதான் இருக்கும்".<br /><br />முல்லா கூறியது உண்மைதான். "நாம் அனைவரும் நமது அகங்காரத்திற்கேற்ப ஒவ்வொரு முகமூடியை அணிந்துள்ளோம். அதன்காரணமாகவே மற்றவர்களுடன் ஒத்துப்போக மறுக்கிறோம்".<br /><br />நமது முகமூடியை நாம் கழற்றிவிட்டால், நமது அகங்காரமும் விட்டுப்போகும். அகங்காரம் வெளியேறிவிட்டால், நமது இயல்புத் தன்மை நம்மிடம் இருந்து வெளிப்படும். எல்லாவற்றிற்கும் மேலான சக்தி மனிதர்க்கு வழங்கிய பெருங்கொடை நமது அகங்காரமற்ற இயல்பே.<br /><br />முகமூடிகளை நீக்கினால், நமக்கு நாமே வைத்துக்கொண்ட முகங்களை நீக்கி, இயல்பான முகத்துடன் வாழ்ந்தால் நாம் எல்லோருமே, எப்போதுமே, ஆனந்த நிலையை அடைந்தவர்களாவோம்.<br /><br /><br /><strong>ஸ்ரீ ஆனந்த அஞ்சிகா</strong>வின் <strong>மனிதனும் தெய்வமாகலாம் </strong>புத்தகத்தில் இருந்து....<div class="blogger-post-footer">http://kumaraess.blogspot.com/atom.xml</div>குமரேஸ்http://www.blogger.com/profile/17707575057941676604noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7214667.post-1140933327957336412006-02-26T11:22:00.000+05:302006-05-05T13:43:33.500+05:30அடுத்து வருவது....மீண்டும் சோதனைப்பதிவு<br /><a href="http://photos1.blogger.com/blogger/7899/233/1600/Dakkarponnu.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/7899/233/320/Dakkarponnu.jpg" border="0" alt="" /></a><div class="blogger-post-footer">http://kumaraess.blogspot.com/atom.xml</div>குமரேஸ்http://www.blogger.com/profile/17707575057941676604noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7214667.post-1140932678443581652006-02-26T11:14:00.000+05:302006-02-26T11:14:38.453+05:30பதிவு 1கேள்வி : "பெட்ரோல் பங்"இல் நாம் செய்யக்கூடாதவை?<br />பதில் : Not Smoking<br /><br />தொலைக்கட்சிப் போட்டி ஒன்றில் போனவாரம் கேட்கப்பட்ட கேள்வியும் அதற்குரிய சரியான பதிலும்.<br /><br />என்ன செய்யிறது.......<br /><br />சிலருக்கு கணக்கு தெரியவில்லை......<br />சிலருக்கு கணக்கும் தமிழும் சேர்த்துத் தெரியவில்லை.......<div class="blogger-post-footer">http://kumaraess.blogspot.com/atom.xml</div>குமரேஸ்http://www.blogger.com/profile/17707575057941676604noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7214667.post-1134640659280588002005-12-15T15:24:00.000+05:302006-01-21T11:59:25.540+05:30இன்னமும் மழை இருக்காம்....<a href="http://photos1.blogger.com/blogger/7899/233/1600/Thumbi.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/7899/233/400/Thumbi.jpg" border="0" alt="" /></a><div class="blogger-post-footer">http://kumaraess.blogspot.com/atom.xml</div>குமரேஸ்http://www.blogger.com/profile/17707575057941676604noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7214667.post-1127791292316465352005-09-27T08:45:00.000+05:302006-03-20T06:09:24.166+05:30தேடல் ஞாபகத்தில்<a href="http://photos1.blogger.com/blogger/7899/233/1600/Iyyar.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/7899/233/400/Iyyar.jpg" border="0" alt="தேடல்" /></a><br /><br />நான் முன்பு ஒருமுறை <a href="http://kumaraess.blogspot.com/2005/05/blog-post_29.html">தேடல்</a> செய்த ஞாபகத்தில் இதைப்பார்த்தவுடன்....<br /><br />படத்தை பெரிதாக்கி பார்க்கலாம்<br /><br />நன்றி: சாவித்திரி கண்ணன்<div class="blogger-post-footer">http://kumaraess.blogspot.com/atom.xml</div>குமரேஸ்http://www.blogger.com/profile/17707575057941676604noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7214667.post-1126945454388603202005-09-17T18:55:00.000+05:302005-09-17T18:55:46.236+05:30இந்த இலை நல்லாயிருக்கு<a href="http://photos1.blogger.com/blogger/7899/233/1600/cat1.JPG"><img style="display: block;margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/7899/233/320/cat.jpg" border="0" alt="இலை" /></a><br />எத்தனை நாளைக்குத்தான் வாத்துக்கறி, <br /><br />வாயெல்லாம் நாறிப்போச்சு<br /><br />இந்த இலை பரவாயில்லை<br /><br />யாருக்காவது இந்த செடியின் பெயரும் அதன் அருமையயும் தெரியுமோ?<br />(இது அயல்நாட்டில் இருந்து தருவிக்கப்பட்டது)<div class="blogger-post-footer">http://kumaraess.blogspot.com/atom.xml</div>குமரேஸ்http://www.blogger.com/profile/17707575057941676604noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-7214667.post-1126807313179108842005-09-15T23:15:00.000+05:302005-09-15T23:31:53.200+05:30வத்தலகுண்டு வாத்துக்களும் வலைப்பதிவு தேடுபொறிகளும்</p><br /><strong>ச</strong>ந்திரமுகி, அன்னியன் போல், இப்ப வாத்து சீசனாம் பெரியவங்க பலபேர் பேசிக்கிட்டாங்க, <br /><br />அதனால் என்பங்கிற்கு....<br /><br />இந்த படங்கள் நான் எடுத்தவை. மற்ற சிலரை போல நெட்டில் சுட்டவை அல்ல என்று மொட்டையாக சொல்லாமல்.....<br /><br />இவை வத்தலகுண்டு CST Hotel வளாகத்தில் உள்ள வாத்துக்கள், இரண்டு வருடங்களுக்கு (23.08.2003 09:13 am) முன்னர் Covansys புண்ணியத்தில், எடுக்கப்பட்ட படங்கள்.<br /><br />சரி, இதுவரையில் வெளிவந்த வாத்து படங்களில் எது நல்லது?<br />(சந்திரமுகி என்று சொல்பவருக்கு பரிசு தரவேண்டும் என்று என்னிடம் சண்டைக்கு வரவேண்டாம்)<br /><br /><a href="http://photos1.blogger.com/blogger/7899/233/1600/Munnar%20002.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/7899/233/400/Munnar%20002.jpg" border="1" alt="" /></a><br /><br /><br />வலைப்பதிவுகளை தேடுவதற்கு 15 தேடுபொறிகள், இவைகளுடன் தற்சமயம் கூகிள் ஆண்டவரும் இணைந்தள்ளாராம்<br /><br /><br />http://www.20six.co.uk/<br />http://blo.gs/<br />http://www.blogarama.com/<br />http://www.findory.com/<br />http://www.blogpulse.com/<br />http://www.blogwise.com/<br />http://www.bloogz.com/<br />http://www.daypop.com/<br />http://blawgs.detod.com/<br />http://blogs.feedster.com/<br />http://www.globeofblogs.com/<br />http://spaces.msn.com/<br />http://www.search4blogs.com/<br />http://www.technorati.com/<br />http://dir.yahoo.com/Computers_and_Internet/Internet/World_Wide_Web/Weblogs/<div class="blogger-post-footer">http://kumaraess.blogspot.com/atom.xml</div>குமரேஸ்http://www.blogger.com/profile/17707575057941676604noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7214667.post-1126647144799118492005-09-14T02:46:00.000+05:302005-09-15T23:45:56.490+05:30புரட்சித்தமிழரசுக் கட்சி (Fully Computerised)</p> <strong>நாம்</strong> கணனி மயப்படுத்தப்பட்ட யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று சாதாரண மளிகைக்கடை தராசு முதற்கொண்டு பழம் பெருமை வாய்ந்த கோவில்கள் வரை, சினிமா கொட்டகை முதல் அரச அலுவலகங்கள் வரை, வாக்காளர் அட்டை முதல் தேர்தல் இயந்திரம் வரை, கணனிமயப்படுத்தப்பட்டு மக்களின் மனதில் ஒரு அழுத்தமான நன்நம்பிக்கையை, அதாவது கணனிமயப்படுத்தப்பட்ட ஒரு விடயம், மிகவும் சரியானது, துல்லியமானது, வெளிப்படையானது, இதில் தவறு நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று உண்மையகவே மக்கள் எண்ணும் அளவிற்கு உள்ளன.<br /><br />அடுத்ததாக மக்கள் தற்போதுள்ள அரசியல்வதிகளையும் அரசியலையும் மிகவும் வெறுக்கிறார்கள், காரணம் அவர்களுடைய ஊழல்களும்,வன்முறைகளும், மக்கள் நலனில் அக்கறையில்லாமல், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் கபட போக்குமேயாகும். ஒரு உயர் அதிகாரி பெரிய அளவில் ஊழல் செய்ய முற்படுகிறார் என்றால், நிச்சயமாக அவருக்கு பின்புலமாக யாரோ ஒரு அரசியல்வாதி யும் அரசியல் கட்சியும் இருக்கும்.<br /><br />எனவே தற்கால அரசியலில் தேவையக உள்ளது, தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் இட்டுச்செல்லும், மக்கள் நலனை காக்கும், ஊழல் செய்வதை எந்த நிலையிலும் ஆதரிக்காத, வெளிப்படையான, ஒரு கணனிமயப்படுத்தப்படட கட்சியாகும்.<br /><br /><strong>அதுவே புரட்சித்தமிழரசுக் கட்சியாகும்</strong>.<br /><br />தற்போதுள்ள கட்சிகளின் கொள்கைகள், நடைமுறைகள், பண்பாடுகள், அமைப்பு முறைகள், செயல்பாடுகள், ஊழல்கள் ஆகியவற்றில் இருந்து வேறுபட்டு, தமிழக நலனே பெரிதாக எண்ணுவதால் சேர்க்கப்பட்டது - <strong>புரட்சி</strong> <br />(எனவே ஏற்கனவே புரட்சி எதுவும் செய்யாமல் தங்கள் பெயருடன் புரடசியை சேர்த்து வைத்திருக்கும் நேற்றைக்கு வந்த <a href="http://kuzhali.blogspot.com/2005/09/blog-post_09.html">புரட்சி புரோகிராமர் </a>வரையானவர்களுடன் எங்களை ஒப்பிட/சேர்க்க வேண்டாம்.) <br /><br />தமிழ்நாட்டை/தமிழனை தமிழன்தான் அரசு செய்திடல் வேண்டும் என்று எண்ணுவதால் சேர்க்கப்பட்டது - <strong>தமிழரசு</strong><br /><br />கழகம் என்றால் ஊழல், ஊழல் என்றால் கழகம் எனவே ஊழல் அற்றறதால் சேர்க்கப்பட்டது - <strong>கட்சி</strong><br /><br /><strong>கட்சியின் அடிப்படைக் கொள்கைகள்</strong><br /><br /> <strong>1.</strong>எம்மதமும் சம்மதமே, சாதி வேற்றுமை/பாகுபாடுகளும் இல்லை, சாதி வேறுபாடு பார்ப்பவர்களுக்கு கட்சி அங்கத்துவம் இல்லை. அதேபோல் மாற்றுக் கட்சியினரையும் சக நண்பராக/மனிதராக மதித்தல் வேண்டும் கொள்கை ரீதியான வேறுபாடுகள், தனி மனித உறவுகளுக்கு தடையாக இருக்க அனுமதிக்க கூடாது. மாற்றுக் கருத்து உள்ளவர்களுடனும் தனிப்பட்ட மனிதத்துவம் சீரிய முறையில் பேணப்படல் வேண்டும். எந்த நிலையிலும் மாற்றுக்கட்சியினரது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை விமர்சனம் செய்யக்கூடாது.<br /><br /> <strong>2.</strong>கட்சியின் அங்கத்துவம், செயல்பாடுகள் அனைத்தும் கணனியால் கையாளப்படும், தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அட்டை உள்ளவர்கள், தமிழ்நாட்டின் எந்த இடத்தில் இருந்தும் on-line இல் கணனிமூலம் அங்கத்துவம் பெறலாம். நீதிமன்றத்தில் வழக்குகளில் சிக்கியவர்கள், தண்டிக்கப்பட்டவர்கள், தீய பழக்கவழக்கமுள்ளவர்கள் கட்சியின் எந்த ஒரு பதவிக்கும் போட்டியிட முடியாது. ஏற்கனவே வேறு கட்சிகளில்/கழகங்களில் இருந்தவர்கள்களுக்கும் 15 வருடங்களுக்கு கட்சியில் எந்த பதவியும் தரப்படமாட்டாது. சாதாரண அங்கத்தினராக மட்டுமே இருக்கமுடியும். அனைத்து அங்கத்தினரதும் தகுதி, சொத்து விபரங்கள் இணையம் <br />மூலம் பொதுமக்கள் பார்வையில் இருக்கும். அங்கத்தினர் எந்தச்சந்தப்பத்திலும் வன்முறையில் இறங்கக்கூடாது. ஒழுக்கத்தை கடைப்பிடித்தல் அவசியம். <br /><br /> <strong>3.</strong>சமூக அக்கறையுள்ள நற்பண்புள்ளவர்களுக்கும், கல்வித்தகுதி உள்ளவர்களுக்கும் முன்னுரிமை. வேலை வெட்டி இல்லாதவர்கள்களும், அரசியலால் தரகு வேலை பார்த்து பொருளீட்டுபவர்களும், அரசியலை ஒரு தொழிலாக எண்ணுபவர்கள் <br />வெளியேற்றப்படுவார்கள், ஒரு முறை வெளியேற்றப்பட்டவர் மீண்டும் எக்காரணத்தினாலும் சேர்த்துக்கொள்ளப்படமாட்டார்கள்.<br /><br /> <strong>4.</strong>கட்சி 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடும். யாரையும் முதல்வராக முன்னிறுத்தி தேர்தலில் வாக்குகள் கோரப்படமாட்டாது. தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றவர், சட்ட சபையில் தலைமை தாங்குவார் அதாவது கட்சி ஆட்சியமைக்கும் நிலைகளில் முதல்வராகவும், எதிர்க்கட்சியாக உள்ளபோது எதிர்க்கட்சி தலைவராகவும், அதுவும் இல்லையெனில் சட்டசபை கொறடாவாகவும் செயல்படுவார். அடுத்தடுத்த நிலைகளில் உள்ளவர்கள் அடுத்தடுத்த பதவிகளை பெறுவர்.<br /><br /> <strong>5.</strong>கட்சியின் தலைவர் ஆட்சியில் எந்த ஒரு நிலையிலும் பங்கு பெறமாட்டார். தேர்தலிலும் போட்டியிடமாட்டார். அவர் தனது தொழிலை செய்துகொண்டு இருப்பார். உட்கட்சி தேர்தல் மூலமே கட்சித்தலமை தெரிவு செய்யப்படும். மற்றைய கட்சியின் கண்ணியம் மிக்க அங்கத்தினர்கள், பத்திரிகையாளர்கள் மற்றறும் பொதுமக்கள் முன்னிலையில் இத்தேர்தல் நடைபெறும்.<br /><br /> <strong>6.</strong>கட்சி பொதுமக்களுக்கு இடையூறாக எந்த நிலையிலும் இருக்காது. பொதுக்கூட்டங்கள், மாநாடுகள்,ஊர்வலங்கள் என்று எதுவுமே நடத்தப்படமாட்டாது. ஏற்கனவே உள்ள தொலைக்காட்சிகளில், மக்கள் நேரடியாக கட்சியின் செயல்பாடுகள் பற்றி மிகவும் வெளிப்படையாக தெரிந்து கொள்ளும்வண்ணம் மக்கள் பங்குபற்றும் நேரடி நிகழ்ச்சிகள் தினமும், ஒவ்வொரு பகுதிவாரியாக நடத்தப்படும். இதன் மூலம் தொலைக்காட்சித் தொடர்களால் மக்கள் அவதியுறுவது தவிர்க்கப்படுவதுடன் பொதுமக்களுக்கு அரசியலில் நம்பிக்கையை உண்டுபண்ண முடியும்.<br /><br /> <strong>7.</strong>கட்சிக்காக நிதி கசோலையாகவே மட்டும் பெறப்படும், அதுவும் பொதுமக்கள் பங்கு பெறும் நேரடி நிகழ்ச்சிகளில். கட்சியின் வரவு-செலவு விபரங்கள் தினமும் இணையத்தில் பொதுமக்கள் பார்வைக்கு இணைக்கப்படும். வெளிப்படையற்ற ஒருவரிம் இருந்து பெறும் நிதி, கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிற நிலையில் அவரது காசோலை அவருக்கே திருப்பி அனுப்பி வைக்கப்படும். <br /><br /> <strong>8.</strong>தேர்தலில் எவருக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பொதுமக்கள் பங்கு பெறும் பல் நேரடி நிகழ்ச்சிகள் மூலம் வெளிப்படையான விவாதங்களுக்கு தயாராக உள்ள கட்சியுடன் விவாதித்து அதனை மக்கள் ஏற்றுக்கொள்ளும்போது, அக்கட்சியின் 5 வருடங்களுக்கான நிபந்தனையற்ற ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும்.<br /><br /> <strong>9.</strong>கட்சிக்காக ஒரு சிறு குண்டூசி முதல் கணனி வரை செய்யப்படும் செலவுகள் உட்பட, அங்கத்துவம் செயற்பாடுகள், முறைப்பாடுகள் யாவும் கணனிமயப்படுத்தப்பட்டு இணையம் மூலம் அது பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்டும்<br /><br /><br /><strong>ஆட்சிக்கு வந்தால் முதலில் கவனிக்கப்பட வேண்டி விடயங்கள்</strong><br /><br /><strong>1.</strong>தமிழகத்தில் அதிக வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய தொழிற்சாலைகளை நிறுவுதல். <br /><strong>2.</strong>தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் இட்டுச்செல்லும் எல்லா செயல்களை ஊக்குவித்தல்<br /><strong>3.</strong>காவற்துறை/நீதித்துறையினை அரசியல் தலையீடுகள் அற்ற ஒரு பூரண சுதந்திர அமைப்பாக மாற்றுதல், கூடவே ஏற்கனவே ஊழல் புரையோடிவிட்ட பெருந்தொப்பைகளை கட்டாய பணி விடுப்பில் வீட்டிற்கு அனுப்பிவிட்டு, புதிதாக அதிக எண்ணிக்கையான, துடிப்பான இளைஞர்களை காவற்துறையில் சேர்த்துக்கொள்வதன்மூலம் ஊழலை முற்றாக கட்டுப்படுத்தல்.<br /><br /><br /><em>என்ன இது ஆளுக்கு மண்டை கழண்டுபோச்சோ எண்டு நினைக்கிறியளோ?</em><br /><br />இல்லை.<br /><br />ஊழலை ஒழிக்க, தமிழகத்தை முன்னேற்ற என்று, பெருசா பந்தல் எல்லாம் போட்டு, மாநாடு வைச்சு யாரோ இண்டைக்கு புதிசா கட்சி தொடங்கிறாராம், அது உண்மையிலேயே ஏதாவது ஒரு கட்சியின் வாக்கு வங்கியை பிரிப்பதற்காக, மாற்றுக்கட்சியினர் கொடுத்த பெட்டி <br />காரணமாக இல்லையெனில் கட்சியின் கொள்கைகள் எப்பிடியிருக்கும் எண்டு யோசித்ததில் வந்த வினை அவுவளவுதான்.<br /><br /><strong>எதற்கும் இருக்கட்டும் எண்டு ஒரு டிஸ்கிளைமர்:</strong><br /><br />1.மேற்குறிப்பிட்ட கட்சிப்பெயரையும் கொள்கைகளையும் விரும்பிய எவரும் பயன்படுத்தலாம், அப்படி பயன்படுத்துமிடத்து கட்சியின் தத்துவாசிரியர் என்று எனது பெயரை அறிவித்தல் வேண்டும்.எதிர்காலத்தில் கட்சியை கைப்பற்றும் நோக்கம் எனக்கு இல்லை, <br />அதனால்தான் <strong>கொ.ப.செ பதவியை நான் கேட்கவில்லை </strong>என்பதையும் நினைவில் கொள்ளவும்.<br /><br />2.மேலும் கட்சியில் வலைப்பதிவாளர் அணி என்று ஒன்று உருவாக்கப்பட்டல் வேண்டும்<div class="blogger-post-footer">http://kumaraess.blogspot.com/atom.xml</div>குமரேஸ்http://www.blogger.com/profile/17707575057941676604noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7214667.post-1121930730314426492005-07-21T12:45:00.000+05:302005-07-21T13:00:52.153+05:30பரட்டைத்திரிசங்கு சாமியாரே</p><br /><br /><strong>நெஞ்சில் ஒரு களங்கமில்லை</strong><br /><br />இனி ரசிகன் நெஞ்சில் ஒரு களங்கமுமில்லை, <br />எந்த நடிகருக்கும் பின்னால் போவதில்லை,<br />Voice கேட்டு உள்ளூர் அரசியல்வாதிகளை முறைப்பதில்லை,<br /><br /><br /><strong>சொல்லில் ஒரு வஞ்சமில்லை</strong><br /><br />இனி ரசிகன் சொல்லில் ஒரு வஞ்சமில்லை<br />அடுத்த முதல்வர் நீ என்று சொல்லவேண்டிய ஒரு வஞ்சமில்லை<br />உனது கல்லாவை நிரப்ப தைரியமா லட்சுமியை சரணடைந்ததால்<br /><br /><strong>வஞ்சமில்லா வாழ்க்கையினில்</strong><br /><br />இனி ரசிகன் வஞ்சமில்லா வாழ்க்கையினில்,<br />கிடைக்கும் சிறு கூலி குடும்பத்திற்கே, குழந்தைகளுக்கே<br />கொடிகட்டவும், கட்டவுட்டுக்கு பால் ஊத்தவும் கிடையாது,<br /><br /><strong>தோல்வியும் இல்லை! </strong><br /><br />இனி எந்த ரசிகனுக்கும் தோல்வியும் இல்லை,<br />நடிகனே, நீ எப்பிடியாவது உன் தன்மானத்தை விற்றுக்கொள்<br />எங்கள் தன்மானத்தை விற்க தயாராக இல்லை, <br />தோல்வியும் இல்லை<br /><br />நல்லவங்களை ஆண்டவன் சில நேரங்களில் சோதிப்பான், <br />ஆனால் கை விட மாட்டான். <br />நல்லவங்களை நடிகன் பல நேரங்களில் பயன்படுத்திக்கொள்வான்,<br />ஆனால் கை விட்டுவிடுவான்.<br /><br /><strong>பரட்டைத்திரிசங்கு சாமியாரே</strong><br /><br />நீ எப்பாவது வா, எப்படியாவது வா<br />இல்லை வராமலே இரு<br />ஆனால், <br /><strong>தன்மானம் என்னும் ஆடையில்லாமல் வராதே</strong>,<br /><strong>இதை ஒரு முறை சொல்வதே அசிங்கம்,<br />100 முறை சொல்ல வைக்காதே</strong>.<div class="blogger-post-footer">http://kumaraess.blogspot.com/atom.xml</div>குமரேஸ்http://www.blogger.com/profile/17707575057941676604noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-7214667.post-1121717111069953632005-07-19T01:16:00.000+05:302005-07-19T01:45:05.276+05:30தூய வெள்ளை அறிக்கை</P><br />இங்கு எந்தவிதமான 'ego-trip' உம் இல்லை.<br /></P><br />தமிழ் வலைப்பதிவுகள், வலைப்பதிவாளர்கள், பின்னோட்டங்கள், போலிப் பதிவுகள், போலிப்பின்னோட்டங்கள், பெருசுகளின் ஆலோசனைகள், புதுசுகளின் குழப்பம், எதிர்கால திட்டங்கள், நம்பிக்கைகள், அவநம்பிக்கைகள் - ஒரு தூய வெள்ளை அறிக்கை.......<br /><br /></P><br /><br /><a href="http://photos1.blogger.com/blogger/7899/233/1600/white%20report.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/7899/233/320/white%20report.jpg" border="0" alt="" /></a><br /><br /></P><br /><br /><strong>அடிக்குறிப்பு:</strong> <br />படம் காட்டுவதை முதன் முதலில் ஆரம்பித்து வைத்தவருக்கு எனது நன்றிகள்<div class="blogger-post-footer">http://kumaraess.blogspot.com/atom.xml</div>குமரேஸ்http://www.blogger.com/profile/17707575057941676604noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7214667.post-1120644243021453442005-07-06T15:16:00.000+05:302005-07-06T15:51:38.580+05:30சத்தியசோதனை - தமிழ்மணத்திற்கு</p><br /><strong>மூ</strong>ர்த்தி அவர்களே,<br /><br />நான் ஏற்கனவே உங்களுடைய முந்தைய பதிவிற்கு கூறிய பதிலை ஞாபகப்படுத்துவதுடன் மேலும் சில வரிகள் கூற ஆசைப்படுகிறேன். <br /><br />"பாதையில் அசிங்கங்கள் உள்ளன போகும்போது பார்த்து போங்கோ" என்று சொல்வதைவிட்டு, கூடவே அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக அந்த அசிங்கங்கள் மீது மூக்கினை வைக்கும்படி செய்து "பார் அவன் எப்படி அசிங்கப்படுத்தியுள்ளான்" என்று கூறுவதுபோல் உள்ளன, <strong>உங்கள் பதிவில் உள்ள இணைப்புகள்</strong>. இதனால் உங்கள் மீதுதான் அதிக கோபம் வருகிறது.<br /><br />"ஜாதி இரண்டொழிய வேறில்லை. ஒன்று ஆண்ஜாதி. மற்றொன்று பெண்ஜாதி. இட்டார் பெரியோர், இடாதோர் சிறியோர்" எனபதில் எனக்கு முழுமையான உடன்பாடுதான், ஆனாலும் உங்கள் மீது கோபப்பட வைக்கிறீர்களே.<br /><br />தமிழர்களாகிய நாம் அங்கிங்கென உலகெங்கும் பரந்து வாழ்கின்றோம். மற்றைய மொழி வலைப்பதிவுகளுக்கு கிடைக்காத ஒரு வரமாக, எமக்கு தமிழில் உள்ள வலைப்பதிவுகளை ஒரே அரங்கத்தில் ஒழுங்குபடுத்தி பார்ப்பதற்கான வசதியினை ஏற்படுத்தித் தந்தவர்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். அவர்களை சங்கடப்படுத்தும் செயல்களையாவது செய்யாமல் இருப்பது மேல்.<br /><br />மேலும் உங்களுடைய முந்தைய பதிவிற்கு தமிழ்மணத்தினூடாக பார்க்கும்போது தெரிகிற பின்னூட்டங்கள் 123453, ஆனால் உங்களுடைய பதிவில் நேரடியாக தெரிகிற பின்னூட்டங்கள் 25 மட்டுமே, எனவே நான் சுவடு சங்கர் போன்று எப்படி இதனை செய்தீர்கள் என்று உங்களிடம் கேட்கமாட்டேன், அதற்கு நீங்கள் கூறியிருந்த பதிலையும் நம்பமாட்டேன். <br /><br /><strong>நான் தமிழ்மணம் காசி மற்றும் மதி அவர்களைத்தான் கேட்பேன்</strong>, ஏனெனில் Blogspot இல் 25 ஆக உள்ள பின்னூட்டங்கள் தமிழ்மணத்தில் மட்டும் 123453 ஆக தெரிகின்றமைக்கு அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ <strong>கவனக்குறைவாக இருந்திருக்கிறார்கள் என்பது எனது தாழ்மையான கருத்து.</strong><br /><br />தமிழ்மணத்தின் சேவையை சந்தேகப்படவைத்துவிட்டீர்களே.<br /><br />உங்களுக்கும் இன்னொருவருக்கும் பிரச்சனை என்றால் அதனை, அதை வெளியில் எங்காவது வைத்து தீர்வுகாணுங்கள். நீங்களோ அல்லது அவரோ ஏன் இதனை பொது இடத்தில் வைத்து தீர்வுகாண முயற்சிக்கிறீர்கள். தனியான ஓர் இடத்தில் இருவருமே வாள் எடுத்துக்கூட சண்டைபோடலாம் அதில் தவறில்லை, <strong>இருவருமே</strong> ஏன் பொதுவான இடத்தில் வைத்து சண்டையிடுவதன்மூலம் <strong>அந்த இடத்தையும்</strong> அங்குள்ள என்னைப்போன்ற <strong>பலரினை</strong> சங்கடப்படுத்துகிறீர்கள்.<br /><br />இந்த 3 வாரங்களில் பதிவுகளில் பின்னூடங்களை காண்பதே அரிதாக உள்ளது. இணையத்தில் புதிதாக எழுத வருபவர்களுக்கு, பின்னூட்டங்கள்தான் முக்கியமான ஊக்கங்கள். தமிழ்மணத்தை பார்த்து, படித்து புதிதாக எழுதுவதற்கு வந்த எத்தனையோ பேர்களில் நானும் ஒருவன். <br /><br />இப்ப உள்ள நிலைமையில் வலைப்பதிவுகளைப்பற்றி தெரியாதவர்களிடம் இதனை அறிமுகப்படுத்தமுடியாமல் உள்ளது. இதையோ நீங்கள் அடிக்கடி படிக்கிறியள் என்று ஏதோ ஒரு ஜந்துவை பார்ப்பதுபோல் வீட்டில் உள்ளவர்கள் சிரிக்கும்படியாக உள்ளது.<br /><br />நமக்குக் கிடைக்கும் சிலமணி நேரங்களை இது போன்ற வீண் சர்ச்சைகளில் விரயம் செய்யாமல் ஆக்கபூர்வமாக பயனுள்ளதாக ஆக்கலாமே.<br /><br />இன்று தமிழ்மணத்திற்கு வர வேண்டுமா என்று சிலர் எண்ணும் அளவிற்கு வந்துள்ளனர். இது தொடரத்தான் வேண்டுமா என்ன?<br /><br /><br />இது மூர்த்தி அவர்களின் பதிவினை பார்த்தவுடன் , அவரது பதிவிற்காக எழுதிய பின்னூட்டம், தனிப்பதிவாக இடப்பட்டுள்ளது<div class="blogger-post-footer">http://kumaraess.blogspot.com/atom.xml</div>குமரேஸ்http://www.blogger.com/profile/17707575057941676604noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-7214667.post-1120126477978654802005-06-30T15:40:00.000+05:302005-06-30T16:12:30.006+05:30எல்லாரும் காட்டிய வழியில்......</p><br />சுற்றுலா விடுமுறை - தாய்லாந்தில் - சந்தித்த Topless அழகிகள்<br /></p><br /><img src="http://img.photobucket.com/albums/v303/kumaraess/Alzhi003.jpg" alt="Image hosted by Photobucket.com"><br /></p><br /><img src="http://img.photobucket.com/albums/v303/kumaraess/665a9c64.jpg" alt="Image hosted by Photobucket.com"><br /></p><br /><img src="http://img.photobucket.com/albums/v303/kumaraess/Alzhi001.jpg" alt="Image hosted by Photobucket.com"><div class="blogger-post-footer">http://kumaraess.blogspot.com/atom.xml</div>குமரேஸ்http://www.blogger.com/profile/17707575057941676604noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7214667.post-1119375119002406792005-06-21T22:57:00.000+05:302005-07-06T15:34:27.916+05:30இப்பவே Longhorn</p><br /><strong>எ</strong>ங்கிட்ட longhorn இப்பவே தயாராய் இருக்கு, வேணுமா? <img alt="Image hosted by Photobucket.com" src="http://img.photobucket.com/albums/v303/kumaraess/LongHorn.jpg" /><br />1.Desktop Sidebar <a href="http://www.desktopsidebar.com">www.desktopsidebar.com</a><br />2.Actual Transparent Window <a href="http://www.actualtools.com">www.actualtools.com</a><br />3.Spaces <a href="http://www.spatialresearch.com/spaces">http://www.spatialresearch.com/spaces</a><br />4.Copernic Desktop Search <a href="http://www.copernic.com/">http://www.copernic.com/</a><div class="blogger-post-footer">http://kumaraess.blogspot.com/atom.xml</div>குமரேஸ்http://www.blogger.com/profile/17707575057941676604noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7214667.post-1117201542942023052005-05-27T19:11:00.000+05:302005-05-27T19:20:25.333+05:30தமிழ்மணத்தில் பிளவாழுமை</p> <br /><strong>காசி</strong> ஆண்டவா<br />கலங்குகிறது மனது<br />தமிழ்மணத்தில் பிளவாழுமை<br />காட்டப்பா மெய்ப்பொருளை<br />536 இல் <br />எத்தனை கங்கா?<br />எத்தனை சந்திரமுகி?<br />புலம்பும்<br />புதியவன்<div class="blogger-post-footer">http://kumaraess.blogspot.com/atom.xml</div>குமரேஸ்http://www.blogger.com/profile/17707575057941676604noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-7214667.post-1116996889502118032005-05-25T09:56:00.000+05:302005-05-25T12:52:08.956+05:30தார் பூசப்பட்ட ஆங்கில பெயர்ப்பலகை.ஏதோ நம்மால முடிஞ்சது.<br /><br />பெயர்ப்பலகை தந்து உதவிய <a href="http://mayavarathaan.blogspot.com/2005/05/blog-post_08.html">மாயவரத்தானுக்கு</a> நன்றி.<br />தார் தந்துதவிய "Microsoft"க்கு நன்றி. <br />(ஈ.ஈ.ஈ.ஈ,,,,,,காசு கொடுத்து தார் வாங்கவில்லை)<br /><br />அடிக்குறிப்பு: <br />1.ஆங்கிலத்திற்கு மட்டும்தான் தார் பூசப்பட்டுள்ளது.<br /> (ஈ.ஈ.ஈ.ஈ,,,,,, நாம சரியாச் செஞ்சிட்டோம்ல)<br /><br />2.மாயவரத்தான் தந்து உதவியது போல் யாரவது சன் ரீவி <br /> பெயர்ப்பலகை தந்தால் அதற்கும் தார் பூசி தரப்படும்<br /><br /><br /><span style="background-color:#FFFF99;">இதுக்குப்போய் அலட்டிக்கலாமா?</span><br /><br /><img src="http://img.photobucket.com/albums/v303/kumaraess/impn-40.jpg" alt="Image hosted by Photobucket.com"><div class="blogger-post-footer">http://kumaraess.blogspot.com/atom.xml</div>குமரேஸ்http://www.blogger.com/profile/17707575057941676604noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-7214667.post-1116672722557897302005-05-21T16:15:00.000+05:302005-05-21T16:22:02.563+05:30கமலும் தமிழ்ப்பண்பாடும்</p><br /><strong>கமல்</strong> "திருமணம் என்கிற சடங்கிலேயே உடன்பாடில்லைனு சொன்ன...." தில் மிகவும் கோபமடைந்த இரசிகர்களில் நானும் ஒருவன்.<br /><br />கமல் ஒரு திறமையான நடிகர், இயக்குநர்,,,,, இப்படி சினிமாவிற்குள் அவர் ஒரு சகலகாவல்லவர்தான்.<br /><br />அதற்காக தமிழ் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் எதிராக, வெளிப்படையாக இப்படி சொல்லத்தான் வேண்டுமா என்ன? <br /><br />தனிப்பட்ட அவரது திருமண வாழ்கையில் இடர்கள் இருந்திருக்கலாம், அதற்கு காரணம் அவரதும், அவர் வாழ்க்கைத் துணையினதும் தனிப்பட்ட மனித குணங்களும், அவர்கள் சார்ந்த சினிமா தொழிலுமே. ஒருவேளை கமல் சினிமா என்கிற தொழில் இல்லாமல், வேறு ஏதாவது ஒரு தொழில் துறையில் இருந்திருந்தால் அவரது தனிப்பட்ட திருமண வாழ்க்கை இந்த அளவிற்கு கசப்பில்லாமல் இருந்திருக்கலாம். <br /><br />இதற்காக நமது பண்பாடும், கலாச்சாரமும் தவறு, இதில் எனக்கு உடனபாடில்லை என்று கூறுவது, மிகவும் தவறான விடயமாகும்.<br /><br />கமல் இதனை வெளிப்படையாக சொன்னது கூட தவறு. <br /><br />ஏன் சொல்கிறேனன்றால், இங்கு சினிமாக்காரன் சொன்னால் அதனை பின்பற்றுவதற்கு ஒரு இளைய சமுதாயம் தயாராக இருக்கின்றது. அதுவும் கமல் போன்று புகழ்பெற்ற, ஒரு திறமை மிக்க ஒருவர் சொல்வதை அப்படியே இளைய சமுதாயம் ஏற்றுக்கொள்ளும் அபாயம் உள்ளது. இதையே துக்ளக் ஆசிரியர் சோ அல்லது அரசியல்வாதி சுப்பிரமணியசுவாமி போன்ற யாராவது ஒருவர் சொல்லியிருந்தால், நாம் கவலையடைய தேவையில்லை, ஏனென்றறால் எதிர்காலத்தில், நான் சோ போல் வரவிரும்புகிறேன் அல்லது சுப்பிரமணிய சுவாமி போல் வரவிரும்புகிறேன் என்று சொல்கிறவர்கள் இல்லை. <br /><br />ஆனால் கமல் போல் வரவிரும்பும் இளம் வயதினர் பலர் உள்ளனர்.<br /><br />இது கமலுக்கும் தெரிந்த விடயம்தான், தனது இரசிகர் மன்றத்தினரையே, மற்றயை இரசிகர் மன்றங்களில் இருந்து வேறுபடுத்தி, நற்பணி இயக்கமாக, இரத்த தான முகாம் போன்ற நல்ல விடயங்களில் ஈடுபடுத்தியவர்.<br /><br />இப்படியாக, தன்னை வாழ்கையில் ஒரு எடுத்துக்காட்டாக கொண்டு ஒரு இளம் சமுதாயம் வளர உள்ள நிலையில், தனது தாய் மொழிக்கும், கலாச்சார பண்பாடுகளுக்கும் எதிரான கருத்துக்களை கூறுவது தவிர்கப்பட வேண்டிய ஒன்றாகும். <br /><br />இது எனது மிகவும் தாழ்மையான வேண்டுகோள்.<div class="blogger-post-footer">http://kumaraess.blogspot.com/atom.xml</div>குமரேஸ்http://www.blogger.com/profile/17707575057941676604noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-7214667.post-1116599508792976922005-05-20T19:37:00.000+05:302005-09-03T18:20:44.273+05:30திருப்பதி அல்வா</p><br /><img src="http://img.photobucket.com/albums/v303/kumaraess/ThiruppathiHalwa2.jpg" alt="Image hosted by Photobucket.com"><br /></p><br /><strong>சில</strong> வருடங்களுக்கு முன்னால், தமிழ் நாட்டின் ஏதோ ஒரு பின் தங்கிய கிராமத்தில், கல்வியறிவு குறைந்த யாரோ ஒரு சிலரால், அந்த நாட்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த ஒரு நடிகைக்கு கோவில் கட்டினார்கள். இவ்விடயம் தலைநகரத்தில் கல்வியறிவுமிக்க(?)வர்களால் நடத்தப்படும் தமிழ் பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளளால் மிகைப்படுத்தப்பட்டு உலகெங்கும் செய்தியாக்கப்பட்டது.<br /><br />உண்மையில் இச்செயல் அக்குறிப்பிட்ட சிலரின் சிறுபிள்ளைத்தனமான, தற்காலிக விளம்பர யுக்தியே அன்றி வேறு எதுவுமே இல்லை. இதனை <strong>பத்திரிகை தர்மத்தை மீறி</strong>, தங்கள் பத்திரிகையின் விற்பனையை அதிகரிப்பதற்கு கிடைத்த <strong>இலவச சந்தர்ப்பமாக </strong>இப்பத்திரிகைகள் பயன்படுத்தியுள்ளனர்.<br /><br />பத்திரிகைகளில் குறிப்பிட்டபடி "கோவில்" என்பதற்கு உரிய பண்புகள், அதாவது மற்றைய கோவில்களில் காணப்படுகின்ற பொதுவான விடயங்கள் - மூலஸ்தானம், பூசை முறைகள், பூசாரி,,,, இப்படி எதையும் அக்கோவில் கொண்டிருந்ததா? இதில் எந்த அளவு உண்மை என்பதை யாருமே பார்க்கவில்லை. (இப்படிஎல்லாம் அமையப் பெற்றிருக்கும் என்றும் நான் நம்பவில்லை).<br /><br />இதனால் இன்று, தமிழ் <a href="http://maraththadi.com/article.asp?id=591">இணையம்</a> உட்பட, பட்டிமன்றங்கள், விவாத மேடைகள் எல்லா இடங்களிலும், முதன்முதலில் ( இது வேறு பெருமை?)தமிழ் நாட்டில்தான் (தமிழர்கள்தான்) நடிகைக்கு ( அதுவும் வேற்று இன நடிகை என்ற நக்கல் வேறு) கோவில் கட்டிய முட்டாள்கள் என்ற அளவிற்கு தமிழர்களாலேயே மீண்டும் மீண்டும் ஏளனமாக பேசப்படுகின்றது.<br /><br />இதற்கு மூல காரணம் தமிழ் நாட்டு பத்திரிகைகளும் அவற்றை நடத்துகின்றவர்களின் <strong>ஆதிக்கமுமே</strong>.<br /><br />இதே பத்திரிகைகளுக்கு <strong>அவர்கள் சார்ந்தவர்களின் முட்டாள் செயல்கள்</strong> கண்ணுக்கு தெரியாது. அல்லது அது ஒரு விடயமாக பத்திரிகைகளில் போடவும் மாட்டார்கள். ஏன் வலைப்பதிவுகளில் கூட பதியமாட்டார்கள்.<br /><br />சரி விடயத்திற்கு வருவோம்!<br /><br />Information Centre அல்லது தகவல் நிலையம் என்றால் என்ன?<br />"சம்பந்தப்பட்ட ஒரு விடயம் அல்லது செயல் தொடர்பான அனைத்து தகவல்களை பெறுவதற்குரிய இடம்"<br /><br />Thirumala-Thirupati Devasthanams Information Centre<br />திருப்பதி-திருமலை தேவஸ்தானங்கள் தகவல் நிலையம் <br /><br />என்றால் என்ன?<br /><br />திருப்பதி-திருமலை தேவஸ்தானங்கள் பற்றிய அனைத்து, அதாவது அங்கு நடைபெறும் பூசைகள் பற்றிய நேரம், அதற்குரிய கட்டணம் என்ன? தங்குவது எங்கே? வேண்டுதல் நிறைவேற்றுதல் எங்கே? இப்படி நிறைய எங்கே/எப்படி என்ற தகவல்களை மக்களுக்கு அதுவும் சென்னையில் உள்ளவர்களும், சென்னை வழியாக திருப்பதி செல்பவர்களும் அறிவதற்காக அமைக்கப்பட்ட தகவல் நிலையம்.<br /><br />உரியவர்கள், இது தகவல் நிலையம்தான், என்பதை பல மொழிகளில் பெயர்ப்பலகையில் எழுதி வைத்துள்ளார்கள். அதாவது <strong>எங்களால் தகவல் நிலையம்தான்</strong> என்று அறிவிக்கப்பட்ட இடத்தை <strong>நீங்கள் உங்கள் முட்டாள்த்தனமான எண்ணங்களால்/செயல்களால் "கோவில்" என்று கொண்டாடுவீர்கள் என்றால் அதற்கு நாம் பொறுப்பு இல்லை என்பதுதான் இந்த பல மொழி அறிவிப்பு பலகையின் அர்த்தம்</strong>.<br /><br />எனக்கு தெரிய, இதே இடம் 1987 இல், ஒரு சிறிய அறையும் இரண்டு மேசைகளுடன், இரண்டு அலுவலர்களுடன் இருந்தது. நான் முதன்முதலில் இங்குதான் போய் எனக்கு தேவையான தகவல்களைப் பெற்றேன்.<br /><br />அன்று தகவல் நிலையமாக இருந்த இடம் இன்று கோவில் ஆகிவிட்டது.(ஆனால் இன்றும் தகவல் நிலையம் என்றுதான் பெயர்ப்பலகை உள்ளது).<br /><br />இன்று இங்கு நடப்பவை எல்லாமே தலைகீழ்.<br /><br />ஒரு கோவிலில் என்னவெல்லாம் நடக்குமோ அவையெல்லாம் இங்கு நடாத்தப்படுகின்றன. (<a href="http://losangelesram.blogspot.com/2005/03/blog-post.html">இது பற்றி Los Angeles Ram எழுதிய பதிவில் பார்கலாம்</a>) அதுவும் திருப்பதியில் வரிசையாக நின்று போவது போல் இங்கும், இப்படியாக ஒரு தகவல் நிலையத்தினை கோவில் என்ற நிலைக்கு கொண்டுவந்தவர்கள், நடிகைக்கு கோவில் கட்டியதாக சொல்லப்படுபவர்கள் போல் படிக்காத பாமர வெள்ளந்திகள் இல்லை, அரசாங்கத்திலும் ( இங்கு, அரச "G" வாகனங்களில் வந்து இறங்குவோரை பார்க்கலாம்) மெத்தப் படித்த உயர் பதவிகளில் உள்ளவர்களும், கூடவே இதனைக் கோவில் ஆக்கினால் வருமானம் பார்கலாம் என்ற வியாபார எண்ணம் கொண்டவர்களும் சேர்ந்தே இந்நிலையை உருவாக்கி உள்ளார்கள்.<br /><br />இது ஓர் அப்பட்டமான முட்டாள்த்தனமான செயல். <br /><br /><strong>ஒரு நடிகைக்கு கோவில் கட்டுதல் போன்ற முட்டாளத்தனமான செயலுக்கு ஈடான செயல், ஒரு தகவல் நிலையத்தினை கோவில் ஆக்கியது.</strong><br /><br />இந்த முட்டாள்த்தனத்தைப் பற்றி, தமிழக பத்திரிகைகள் எவருமே கண்டுகொள்வதில்லை ஏன்?<br /><br />"திரு" வின் கூற்றுப்படி "நான் தூணிலும் இருப்பேன், துரும்பிலும் இருப்பேன்" என்பதற்கமைய தி.நகரிலும் இருப்பதனாலா? <br /><br />அப்படி நினைப்பவர்கள், தங்கள் வீட்டு........ல் கூட தேடலாமே? ஏன் <a href="http://img1.picsplace.to/img1/2152/Thiruppathi_Halwa.JPG">தி.நகருக்கோ </a>அல்லது திருப்பதிக்கோ போகவேண்டும்?<br /><br />சரி, "திரு" வின் கூற்றுப்படி, அவரும் <strong>பக்தர்களின் எதிர்கால நன்மை கருதி இப்படி சொன்ன பின்னரும்</strong>, அவரது கூற்றுக்கு முரணாக, இப்படியான தேவஸ்தானங்களை உருவாக்கி, பக்தர்களின் செல்வங்களை பெற்று, உலகிலேயே காணிக்கை பெறுவதில் முதலாவது இடம் இல்லை இரண்டாவது இடம் என்று பெருமை கூறி, அச் செல்வங்களை/<strong>பலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் இடைத்தரகர் கூட்டம்தான் யார்?</strong><br /><br /><br />இதைத்தான் சொல்லுறது திருப்பதி அல்வா.<div class="blogger-post-footer">http://kumaraess.blogspot.com/atom.xml</div>குமரேஸ்http://www.blogger.com/profile/17707575057941676604noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-7214667.post-1116254859434444482005-05-16T20:14:00.000+05:302005-05-16T20:17:39.436+05:30இடைத்தேர்தல் முடிவுகள் - 2006 அச்சம்1. தற்காலிகமாக காணமல் போயிருந்த மதில் மேல் பூனை தலைவர் மீண்டும் வரலாம்.<br /><br />2. காமராஜர் ஆட்சி கோஷம் வீரியம் கூட்டப்படலாம். <br /><br />2a.மத்திய நிதி தலைமையில், புதிதாக வர இருப்பவர்களுடன் சேர்ந்து மூன்றாவது அணி அமையலாம் <br /><br />3. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு அண்ணன் உடண்படலாம்<br /><br />4. தம்பி தனித்து விடப்படலாம் (வெளியுறவுக்கொள்கையால்) அதனால் மீண்டும் இமாலயத்தவறு செய்யலாம்.<br /><br />5. இடைத்தேர்தல் வெற்றி, மீண்டும் தவறான கவனக்குறைகளை ஏற்படுத்தலாம்<br /><br />6. தேசிய எதிர்க்கட்சிக்கு தமிழ் நாட்டில் சங்கு ஊதப்படலாம்.<br /><br />7. கூத்தாடிகளின் ஆட்சிக்கனவு கலையலாம்.<div class="blogger-post-footer">http://kumaraess.blogspot.com/atom.xml</div>குமரேஸ்http://www.blogger.com/profile/17707575057941676604noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-7214667.post-1116001576115754962005-05-13T21:41:00.000+05:302005-05-14T00:09:36.570+05:30வரலாற்றுப் பெருமை கொண்ட "புட்டு"<br /><br /><img src="http://img.photobucket.com/albums/v303/kumaraess/Puttu2.jpg" alt="Image hosted by Photobucket.com"><br /><p><br />மாம்பழ சீசன் வந்தாலே எனக்கு கொண்டாட்டம்தான், அந்த அளவிற்கு மாம்பழப்பிரியன், எப்பிடியும் கிழமையில மூன்று நாள் வாங்கிவந்து விடுவேன், <br /><br />"என்ன, முந்தநாள் வாங்கியதில் இன்னும் இரண்டு பழம் இருக்கெல்லை" <br />"என்னண்டுதான் தினமும் புட்டும் மாம்பழமும் சாப்பிடிறியளோ தெரியாது" <br /><br />என்ற வார்த்தைகளை நான் பொருட்படுத்துவதே இல்லை.<br /><br />அரிசிமா புட்டும் மாம்பழமும் என்றால் போதும், அதற்காக மட்டும் வீட்டில் எந்த விட்டுக்கொடுப்பிற்கும் நான் வருவேன் என்றால் அது மிகையாகாது.<br /><br />அதுமட்டும் இல்லாமல் இந்த மாம்பழங்களை சீவும் போது, மருமக்களை (அக்கா, தங்கையின் பிள்ளைகள், எல்லோருமே 4 முதல் 12 வரையுள்ள வயதினர்) சுற்றிவர பக்கத்தில் வைத்துக்கொள்வது வழக்கம். <br /><br />அதுத்த இன்னோரு நிரந்தர பஞ்ச் வசனமும் கடைசியில் வரும் (ஏக்கம்?).<br /><br />"என்னதான் இருந்தாலும் எங்கடை "அம்பலவி", "கறுத்த கொளும்பான்" போல் வராது"<br /><br />இப்படித்தான் இன்றைக்கு பங்கணப்பள்ளி மாம்பழத்தை சீவி முடித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, <br /><br />ஒரு மருமகன், இவன் கொஞ்சம் ஆர்வக்கோளாறு பேர்வளி, <br /><br />"ஏன் மாமா, நீங்க புட்டும் மாம்பழமும் சாப்பிடுறது போல் இடியப்பமும் மாம்பழமும் சாப்பிடுறதில்லை?" <br /><br />"இரண்டுமே அரிசிமாவில் அவிக்கிற சப்பாடுகள்தானே?"<br /><br />எனக்கு பதில் சொல்லமுடியவில்லை.<br /><br />இவ்விடயம் என்னுள் பல கேள்விகளை எழுப்பிவிட்டது. <br /><br />தமிழ் நட்டில் எந்தவோரு சைவ <a href="http://www.arusuvai.com">சாப்பாட்டு</a>க்கடைக்கு போனாலும், அங்கு பிரதானமாக இட்லி, வடை, தோசை, சப்பாத்தி, பரோட்டா, பூரி அல்லது ஏதோ ஒரு சாதம் இருக்கும், ஆனால் புட்டு, இடியப்பம் கிடைப்பது மிகவும் அரிதான விடயம். <br /><br />இந்த நிலை எப்படி வந்தது? <br /><br />ஏனென்றால் இவைகளில் எதுவுமே பண்டைய தமிழ்நாட்டில் புழக்கத்தில் இருந்ததாக எந்தவொரு வரலாற்று/புராண கதைகளில் கூறப்படவில்லை. ஆனால் "புட்டு"க்கு வரலாற்றுப் பெருமை உண்டு. <br /><br />சங்ககாலத்தில், "பிட்டுக்கு மண் சுமந்து பாண்டிய மன்னனிடம் பிரம்படி சிவன் பெற்ற கதை"யும் உண்டு. <br /><br />இன்றும் ஆவணி மகத்தில் சிவன் கோவில்களில் பிரசாதமாக புட்டு கொடுக்கும் வழக்கம் உள்ளது.<br /><br />ஆக, இப்படியான வரலாற்றுப் பெருமை கொண்ட "புட்டு" எப்படி பின்தங்கியது என்று அறிவது நல்லது.<br /><br />ஏற்கனவே "அண்டை அயல்" <a href="http://aruls.blogspot.com">அருள்</a> (அசைவப்பிரியர் போலும்) தனது <a href="http://aruls.blogspot.com/2005/05/blog-post_08.html">மரை பொருளில் </a><br /> <br /><strong>\\</strong> பழந்தமிழர் தாமே வேட்டையாடி பிடித்து உண்பதல்லாமல், புலி அடித்துச் சென்ற மானின் எச்சம், செந்நாய்கள் விட்டுச்சென்ற மானின் எச்சம் இவற்றையும் உண்டனர். அதுசரி, சங்ககாலத் தமிழர் வேறு என்ன விலங்குகளை உண்டனர்? ஆடு, காட்டுப்பசு (ஆமான்), பன்றி, முள்ளம்பன்றி, யானை, மான், முயல், குரங்கு, எலி, பசு ... இந்த மெனு போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?<strong>\\</strong><br /><br />என்று கொஞ்சம் அசைவமாக தேடியுள்ளார். <br /><br />நாமும் யாரையாவது துணை சேர்த்துக்கொண்டு தேடல் வேண்டும்.<br /><br />"<a href="http://idlyvadai.blogspot.com">இட்லி வடை</a>" காரரை கேட்கலாம் என்றால், ஏற்கனவே அவரின் "<a href="http://idlyvadai.blogspot.com/2005/04/blog-post_20.html">தமிழ் எழுத்துக்களின் சுடுகாடு</a>"......வுடு ஜூட்.......<div class="blogger-post-footer">http://kumaraess.blogspot.com/atom.xml</div>குமரேஸ்http://www.blogger.com/profile/17707575057941676604noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7214667.post-1115567768288816632005-05-08T21:16:00.000+05:302005-05-08T21:52:41.080+05:30கவிஞன் என்பவன் யார் ?சுந்தரவடிவேலின் அவமதிக்கப்படும் ஒரு போராளி இல் ஆரம்பித்த மீள்வாசிப்பு, அதனால் எழுந்த <a href="http://www.domesticatedonion.net/blog/?item=478">வெங்கட்டின் மீள வாசிப்பும்</a>, இப்படியே பலரும் தங்கள் கருத்துக்களை கூற இவ்விடயம் தமிழ்மணத்தின் விவாதங்களில் <a href="http://womankind.yarl.net/archives/author/selvanayaki ">சிறந்த</a> விவாதமாக கருதப்பட்டுக் கொண்டிருக்கின்றது.<br /><br />இதனால் என்ன பயன்? <br /><br />ஐந்து பத்து நூற்றாண்டுகளுக்கு முன்னால் நடந்ததாக சொல்லப்படுகின்ற ஒரு வரலாற்று/புராண நிகழ்வினைப்பற்றி விவாதித்து நாம் பெறப்போகும் பயன்தான் என்ன?<br /><br />கடந்து போன பஸ்ஸிற்கு கை காட்டுவதில் என்ன பலன்? <br /><br />இதை தவிர்த்து, <br /><br />நிகழ்காலத்தில் உள்ள விடயத்தினை விவாதித்து, முடிவு கண்டு, எதிர்கால சந்ததியினரையாவது குழப்பத்திற்குட்படுத்தாமல் தவிர்க்கலாம்.<br /><br />இவ்விடத்தில், <br /><br />"<strong>கவிஞன் என்பவன் </strong>நாலு எதுகை மோனையப் போட்டு, கேட்டபோது பாட்டெழுதித் <strong>தருபவனில்லை</strong> என்பது நினைவுக்கு வருகிறது" -<a href="http://sundaravadivel.blogspot.com/">உபயம் சுந்தர்</a>-<br /><br />என்பது மீள் ஆய்விற்குட்படவேண்டிய விடயமாக நான் கருதுகிறேன்.<br /><br />நீண்ட நாட்களாகவே <br /> "தமிழகம் உன் பின்னால் வரும்......"<br /> "தமிழ் மண்ணை விட்டு ஓடிவிடமாட்டேன்........." <br /> "............................................................."<br />என்று பணத்திற்காக, இப்படிப்பல பாட்டெழுதிக்கொண்டிருப்வர்களை கவிஞன் என்று பாராட்டிக் கொண்டிருக்கிறார்களே!. <br /><br />இப்படியான சினிமாக் கவிஞர்கள்தான், தமிழினத்தை ஓர் பிற்போக்கான பாதைக்கு இட்டுச் செல்கிறார்கள். இவர்கள் சினிமாவிற்கு அப்பால் சில/பல தரமான படைப்புகளை தந்திருக்கலாம், அவற்றினால் தமிழ் சமுதாயத்திற்கு ஏற்பட்ட நன்மைகளைவிட, சினிமாவில் கதா நாயகர்களை தனி மனித துதிபடுவதால், அதுவும் பல நாயகர்களைப்பற்றி துதிபாடுவதால், ஏற்பட்ட தீமைகளே அதிகம். இன்று உண்மையிலேயே <strong>எந்தவித சிறப்புத் தகுதிகள் இல்லாமல்,</strong> ஆட்சிக் கனவுகளுடன் அலையும் கதா நாயகர்கள் எத்தனைபேர்? அவர்களில் எவன் பின்னால் போவது என்று தடுமாறும் தமிழர்கள்தான் எத்தனைபேர்?<br /><br />ஆனால் ஒரே சினிமாக் கவிஞர், ஒரு கதாநாயகனை "பொன்மனச் செல்வன்" என்றும் இன்னொரு கதாநாயகனை "தங்க மனசுக்காரன்" என்று துதி பாடியிருப்பார்.இதற்காக இவருக்கு கிடைத்ததோ பணம். ஆனால் அடிமட்டத்தில், ஏதோ ஒரு கிராமத்தில் தமிழ் சமுதாயம், "பொன்மனச் செல்வன்" பெரியவனா? "தங்க மனசுக்காரன்" பெரியவனா? என்று அடிபட்டுக் கொண்டிருக்கும்.<br /><br />இதைவிட தமிழர் அல்லாத மற்றோரையும்<br /><br /> "நீதான் அழகன், நீ நடந்தால் அழகு..." <br /> "உன்னால்தான் தமிழ் நாட்டிற்கு விடிவு..." <br /> "நீதான் தமிழ் மண்ணை ஆள்வாய்...." <br /><br />என்று தமிழை விற்றுக்கொண்டிருக்கிறார்களே.<br /><br />இவர்களை எதிர்கால தமிழ் சந்ததியினர் எவ்வாறு பார்க்கப்போகிறார்கள்? தன்மானக் கவிஞர்களாகவா? இல்லை மாற்றான் தற்பெருமைக்காக தமிழை விற்ற கவிஞர்களாகவா? இல்லை கவிஞர்கள் என்போர் சினிமா கலைஞர்களில் ஒரு பிரிவினர் அவ்வளவுதான் என்றா?<br /><br />இதை விவாதித்தால் என்ன!<br /><br />தான் சார்ந்த கழகத்திற்காகவும் அதன் தலைவனுக்காகவும் எழுச்சிப் பாடல்களை எழுதி, அவற்றை தன் கணீரெண்ற குரலால் பாடி பெருமை சேர்த்துக் கொண்டிருந்த ஒரு கவிஞர், அதே தலைவனின் போர்வாள், படைத் தளபதி, அதுவும் ஈழத்தமிழன் துயர் போக்குவதற்காக அண்டை நாட்டிற்கு அனுமதியின்றி போய் வந்ததை பாட மறுத்ததையும் பத்திரிகைகளில் படித்த ஞாபகம் உண்டு. இந்த கவிஞரரைப்பற்றி எதிர்கால தமிழ் சந்ததியினர் குழப்பத்திற்கு வரமாட்டார்கள் என்பது எனது தனிப்பட்ட கருத்து.<div class="blogger-post-footer">http://kumaraess.blogspot.com/atom.xml</div>குமரேஸ்http://www.blogger.com/profile/17707575057941676604noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-7214667.post-1115475503263058772005-05-07T19:42:00.000+05:302005-05-07T21:18:18.086+05:30தூய தமிழ்?<strong>இதில் உள்ள 125 இற்கு மேற்பட்ட தமிழ் அல்லாத சொற்களை கண்டு பிடிக்கமுடியுமா?</strong><br /><br />"நான் ஓர் இந்தியப் ப்ரஜை, இதன் அர்த்தம் சட்டரீதியாக ப்ரஜாவுரிமை ஊர்ஜிதம் செய்யப்பட்ட பொதுஜனங்களில் ஒருவன். எனது சகோதரன் சகோதரிகளும் அவ்வாறே, இதில் எந்த விநோதமும் இல்லை. விஞ்ஞானம் படித்து பரிட்சை எழுதி கிடைத்த அங்கீகாரத்தினால் அரச காரியாலயத்தில் உத்யோகம் கிடைத்தது. அந்த வயதில் அனுபவம் குறைந்த அதிகாரி, தினமும் நித்திரை இல்லாமல் சம்பந்தப்பட்ட அவசியமான விடயங்களை உதாரணமாக சரித்திரம், சுகாதாரம், வர்த்தகம், அபிவிருத்தி, பத்திரிக்கை, ராணுவம் போன்றவற்றில் எனது அறிவை விஸ்த்தரிப்பு செய்ததில் அலுவலகத்தில் கௌரவம் கூடியது. அரச காரியாலயத்தில் அபூர்வமாக இப்படி அர்ப்பணித்து செயற்படும் ஒருவனாக நான் இருப்பதாக எல்லோரும் அபிப்ராயப்பட்டார்கள். அடுத்த மாதமே அதிர்ஷ்டம் என் பக்கம் இருந்ததால் சம்பளத்தில் ஒரு இலக்கம் கூடியது. இதனால் ஏற்பட்ட ஆனந்தத்தில் ஆலயம் சென்று அர்ச்சனை அபிஷேகம் செய்து சந்தோஷத்தை கொண்டாட முடிவு செய்தேன். <br /><br />ஆலயத்தில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீலஸ்ரீ வரப்ரசாத சுவாமிகள் சக்தி, சிருஷ்டி, ஜென்மம், இராகம், சங்கீதம் என்று ஒரே தத்துவமாக பிரசங்கம் செய்துகொண்டிருந்தார். என்ன ஆச்சர்யம் அங்கு வந்திருந்த பிரதம அதிதி, கவர்னர், நீதிமான், சர்வதேச பாஷை நிபுணர் எல்லோர் கண்ணிலும் நீர்வீழ்ச்சி அளவிற்கு கண்ணீர் கரைவதை காணமுடிந்தது. இடையிடையே கரகோஷம்வேறு ஒரே சப்தமாக ஒலித்தவண்ணம் இருந்தது.<br /><br />எனக்கு அருகில் உட்கார்ந்திருந்த நபர்கள் யாரென என்னால் அனுமானிக்க முடிந்தது, ஒருவர், சமீபத்தில் பாராளுமன்றத்தினால் யுத்த தளவாடங்கள் விநியோகம் தொடர்பான பிரச்சனையில், நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு எதிரான தீவிரவாத அங்கத்தினருடன் தொடர்புடையவர் என்று, மந்திரிசபையின் ஆட்சேபணைகளால், சந்தேகத்தின் அடிப்படையில், இராஜிநாமா கோரப்பட்டு சஸ்பென்ட் செய்யப்பட்ட விஞ்ஞானி, மற்றவர் வியாதிகளுக்கு தீர்வு விரதம் அனுஷ்டிப்பதுதான் உத்தேச இலாபம் என்று சபதம் செய்துவிட்டு ஆலய விஜயம் செய்யும் அன்பர்.<br /><br />இருவரும் மிகவும் ஜாக்ரதையாக, பிரசங்க கோஷங்களால் எந்த சங்கடமும் இல்லை என்பதுபோல் தங்களுக்குள் அவர்கள் இஸ்டத்திற்கு, சினிமா விமர்சனம், இந்த வருட பட்ஜட்டால் யாருக்கு எத்தனை வீதம் நஷ்டம், சமாதான நடவடிக்கை மற்றும் யுத்த நிறுத்த உத்தரவாதம் தொடர்பாக அயல் நாட்டுத் தூதுவரின் விசேஷ பேட்டி, சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களின் ஆரோக்யம் தொடர்பான அரச கெஜட் அமுல்படுத்துதலில் உள்ள இடர்பாடுகள், என்று சகலதையும் அலசிக்கொண்டிருந்தார்கள்.<br /><br />எனக்கு தொடர்ந்து இருக்க பிடிக்கவில்லை. வெளியில் வந்தால் ஆகாயம் இருண்டு கிடக்கு, வாயு பகவானும் ஏதோ எண்ணத்தில் இருப்பதாக தோன்றியது. <br /><br />நிலுவையில் உள்ள வேலைகள் என்னவென்று யோசித்தவாறு அவசரமாக கிளம்பினேன்.<br /><br />நாளைக்கு நண்பனின் பாட்டனாரின் ஈமக்கிரியை ஞாபகம் வந்தது, போய் அஞ்சலி செலுத்தி அனுதாபத்ததை தெரிவிக்கவேண்டும்.<br /><br />வீட்டில் வாடகைக்கு இருப்பவர், என்னால் ஏதோ ஓர் காரியம் ஆகவேண்டும் என்று சொன்னவர், என்னவென்று தெரியவில்லை? அவருடைய போர்சனில் அலுமாரிப் பிணைச்சல் மாத்தவேணும், கக்கூஸ் பிரச்சனையும், பின்கதவு தாழ்பாள் பிரச்சனையும் ஏற்கனவே மாத்தியாச்சுத்தானே? ஏற்கனவே வாடகை பாக்கி, தவிர அந்தாளுக்கு நான் தேவையில்லாமல் பொலிசில் ஜாமீன் கொடுத்து அபராதம் வேறு கட்டியிருக்கிறேன் என்று மனைவி தினமும் வருத்தப்பட்டுக் கொள்கிறா, ஆனால் இம்முறை கட்டாயமாக அவரிடம் சொல்ல வேண்டும், அவரது வீட்டு மிருகத்தை பின் விறாந்தையில கட்டிப்போடுங்கோ என்று, கூடவே வாடகை பாக்கி இல்லாமல் பூஜ்யம் ஆக்கும்படி, பின்னர் பிரதி மாதமும் தவறாது வாடகையை தர சொல்லவேணும். ஆனால் அவர் ஆமோதித்தால், நிச்சயம் வாதம் பண்ணவேண்டும் இல்விட்டால் நான் வீட்டில இருக்கிறது கஷ்டம்.<br /><br />படலையைத் திறந்து உள்ளே வந்து போர்ட்டிக்கோ லைட்டை போட, அது பிரகாசமாக எரியத் தொடங்கியது."<div class="blogger-post-footer">http://kumaraess.blogspot.com/atom.xml</div>குமரேஸ்http://www.blogger.com/profile/17707575057941676604noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7214667.post-1110372765440770042005-03-09T18:22:00.000+05:302005-03-15T19:57:07.283+05:30பழைய பஞ்சாங்கமும்,,,,,<strong></strong><br /><strong>அப்போது</strong> நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். கல்லூரி எங்கள் ஊரில் இருந்து 6 மைல் தூரத்தில் உள்ள நகரத்தில், பஸ்ஸில் தினமும் அதிகாலையில் போய் இரவு திரும்பி வருவோம். இதனால் மிக நெருங்கிய உறவினர்கள் எங்கள் ஊரில் கிடைக்காத, நகரத்தில் கிடைக்கும், பொருட்களை வாங்குவதற்கு எங்களை பயன்படுத்துவதுண்டு.<br /><br />அப்படித்தான் ஒருநாள் நானும் நண்பர்களும் பஸ்ஸிற்காக காத்திருக்கும்போது அப்பாவின் ஒன்றுவிட்ட அக்கா என்னிடம் பணத்தை தந்து, நகரத்தில் உள்ள புத்தக கடையில் ஒரு புது பஞ்சாங்கம் வங்கி வரும்படி ஊறினார், நானும் ஓம் வாங்கி வருகிறேன் என்று பஸ்<br />ஏறிவிட்டேன். ஆனால் அன்றைய தினம் நாங்கள் நகரத்திற்கு போகாமல் கல்லூரி வாசலில் பஸ்ஸில் ஏறிவிட்டோம், பஞ்சாங்கமும் வாங்கவில்லை. மறுநாளும் ஏதோ காரணத்தால் வாங்கமுடியவில்லை. மூன்றாம் நாள்தான் வாங்க முடிந்தது.<br /><br />அன்றுதான் முதன்முதலில் பஞ்சாங்கம் ஒன்றினை விரும்பியோ விரும்பாமலோ ஊடறுத்து பார்ப்பதற்கு, அதுவும் ஓடும் பஸ்ஸில் சந்தர்பம் கிடைத்தது.<br /><br />அதில்,<br />அன்னப்பால் பருக்க,,,<br />அறுவடை செய்ய,,,,<br />அடிக்கல் நாட்ட,,,,<br />புது தொழில் தொடங்க,,,<br />புது மனை புக,,,<br />புது கணக்கு தொடங்க,,,<br />,,,,,,,,,,,,,,,,,,,,<br />,,,,,,,,,,,,,,,,,,,<br /><br />இப்படி எல்லாவற்றிக்குமே (அதற்காக புதுச்செருப்பு போட இருந்ததா என்று பின்னூட்டம் போட வேண்டாம்-மொத்தத்தில் புது ஆடை, அணிகலன் அணிய நல்ல நேரம் இருந்தது) நல்ல நேரம் பார்ப்பதற்கு பஞ்சாங்கத்தில் கணித்திருந்தார்கள். ஆனால் புது பஞ்சாங்கம் வாங்குவதற்கு என்று<br />எந்த நல்ல நேரமும் குறிக்கவில்லை, சரி எனக்கு ஒரு சாட்டு கிடைத்துவிட்டது மாமியிடம் இருந்து தப்பிக்க.<br /><br />வாங்கிய வாக்கிய பஞ்சாங்கத்தை கொடுப்பதற்கு மாமி வீட்டிற்கு போனபோதுதான் தெரிந்தது மனுசி நல்ல கொதியில இருந்தது.<br /><br /><span style="color:#cc0000;">"ஏன்ராப்பா உன்னட்டை ஒரு வேலை சொன்னா நேரத்திற்கு செய்யமாட்டியோ?"</span><br /><span style="color:#006600;">"நீங்க வேற, எல்லா வேலைகளுக்கும் பஞ்சாங்கம் பாத்து செய்யிற நீங்க, புது பஞ்சாங்கம் வாங்குவதற்கு மட்டும் நேரம் பார்த்து தந்தனீங்களோ? அதுதான் நேரத்திற்கு நடக்கேல்லை"</span><br /><br /><span style="color:#cc0000;">"இது என்ன விசர்த்தனமா கதைக்கிறீர், யாராவது புது பஞ்சாங்கம் வாங்குவதற்கும் நேரம்<br />பார்ப்பினமோ?"</span><br /><span style="color:#006600;">"ஏன் பஞ்சாங்கம் பார்க்கிறது மட்டும் விசர்த்தனமான படாத உங்களுக்கு இது மட்டும் விசர்த்தனமாக தெரியுது?"</span><br /><br /><span style="color:#cc0000;">"உன்னோட கதைக்கேலாது, சரி இப்ப நீ வாங்கியந்த பஞ்சாங்கத்தில பார், அதுக்கு ஏதும் நேரம் போட்டிருக்கோ?"</span><br /><span style="color:#006600;">"இல்லை"</span><br /><br /><span style="color:#cc0000;">"நான் சொன்னனான்தானே, நீ விசர்த்தனமான வேள்வி கேட்கிறாய் என்று - இப்ப தெரியுதோ"</span><br /><span style="color:#006600;">"அப்ப, எல்லாத்துக்கும் நல்ல நேரம் கணித்த ஐயர், இதுக்கு மட்டும் நல்ல நேரம் கணிக்க தேவையில்லை என்று விட்டிருக்கிறார் என்றால் அவருக்கு தெரியும் இதெல்லாம் விசர்த்தனம்-ஊர் உலகத்தை ஏமாற்றுவதற்குத்தான் பஞ்சாங்கம், அந்த பஞ்சாங்கத்தை பார்த்து எல்லாத்தையும் செய்யிறதுதான் விசர்த்தனம்"</span><br /><br /><span style="color:#cc0000;">"உனக்கு விசர்தான்"</span><br /><span style="color:#006600;">"ஏன்? நல்ல நேரங்களை பார்ப்பதற்காக உள்ள பஞ்சாங்கத்தை நல்ல நேரத்தில் வாங்க வேண்டியதில்லை என்றால் மற்றதற்கெல்லாம் நல்ல நேரம் பார்ப்பதில் அர்த்தமில்லை"</span><br /><br /><span style="color:#cc0000;">"இதற்கு மேல் உன்னோடை கதைத்தால் எனக்குத்தான் விசர்"<br /></span><br />என்று கூறிவிட்டு மாமி அந்த இடத்தை விட்டு போய்விட்டார். நானும் <strong>"குருக்கள் செய்தால் குற்றமில்லை"</strong> என்று நினைத்துக்கொண்டு அந்த நேரத்திற்கு விட்டுவிட்டேன்.<br /><br />20 வருடங்கள் ஓடிவிட்டன,<br /><br />சரி, இதனை இப்ப Blogல் போடப்போறனே, (போட்டால் என்னுடைய சந்தேகம் தீரும் என்றுதான்) அதற்கு முதல் இப்ப உள்ள பஞ்சாங்கத்தை (இரண்டாவது தடவையாக) எடுத்துப்பார்த்தால், அதில் கூட புது பஞ்சாங்கம் வாங்குவதற்கு என்று எந்த நல்ல நேரமும் கணிக்கப்பட்டிருக்கவில்லை.<br /><br />வையகம் உள்ளவரை ஏமாற்றுவதற்கும், ஏமாறுவதற்கும் யாரோ இருந்துகொண்டிருப்பார்களா என்ன?<div class="blogger-post-footer">http://kumaraess.blogspot.com/atom.xml</div>குமரேஸ்http://www.blogger.com/profile/17707575057941676604noreply@blogger.com4