« Home | திருப்பதி அல்வா » | இடைத்தேர்தல் முடிவுகள் - 2006 அச்சம் » | வரலாற்றுப் பெருமை கொண்ட "புட்டு" » | கவிஞன் என்பவன் யார் ? » | தூய தமிழ்? » | பழைய பஞ்சாங்கமும்,,,,, »

கமலும் தமிழ்ப்பண்பாடும்


கமல் "திருமணம் என்கிற சடங்கிலேயே உடன்பாடில்லைனு சொன்ன...." தில் மிகவும் கோபமடைந்த இரசிகர்களில் நானும் ஒருவன்.

கமல் ஒரு திறமையான நடிகர், இயக்குநர்,,,,, இப்படி சினிமாவிற்குள் அவர் ஒரு சகலகாவல்லவர்தான்.

அதற்காக தமிழ் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் எதிராக, வெளிப்படையாக இப்படி சொல்லத்தான் வேண்டுமா என்ன?

தனிப்பட்ட அவரது திருமண வாழ்கையில் இடர்கள் இருந்திருக்கலாம், அதற்கு காரணம் அவரதும், அவர் வாழ்க்கைத் துணையினதும் தனிப்பட்ட மனித குணங்களும், அவர்கள் சார்ந்த சினிமா தொழிலுமே. ஒருவேளை கமல் சினிமா என்கிற தொழில் இல்லாமல், வேறு ஏதாவது ஒரு தொழில் துறையில் இருந்திருந்தால் அவரது தனிப்பட்ட திருமண வாழ்க்கை இந்த அளவிற்கு கசப்பில்லாமல் இருந்திருக்கலாம்.

இதற்காக நமது பண்பாடும், கலாச்சாரமும் தவறு, இதில் எனக்கு உடனபாடில்லை என்று கூறுவது, மிகவும் தவறான விடயமாகும்.

கமல் இதனை வெளிப்படையாக சொன்னது கூட தவறு.

ஏன் சொல்கிறேனன்றால், இங்கு சினிமாக்காரன் சொன்னால் அதனை பின்பற்றுவதற்கு ஒரு இளைய சமுதாயம் தயாராக இருக்கின்றது. அதுவும் கமல் போன்று புகழ்பெற்ற, ஒரு திறமை மிக்க ஒருவர் சொல்வதை அப்படியே இளைய சமுதாயம் ஏற்றுக்கொள்ளும் அபாயம் உள்ளது. இதையே துக்ளக் ஆசிரியர் சோ அல்லது அரசியல்வாதி சுப்பிரமணியசுவாமி போன்ற யாராவது ஒருவர் சொல்லியிருந்தால், நாம் கவலையடைய தேவையில்லை, ஏனென்றறால் எதிர்காலத்தில், நான் சோ போல் வரவிரும்புகிறேன் அல்லது சுப்பிரமணிய சுவாமி போல் வரவிரும்புகிறேன் என்று சொல்கிறவர்கள் இல்லை.

ஆனால் கமல் போல் வரவிரும்பும் இளம் வயதினர் பலர் உள்ளனர்.

இது கமலுக்கும் தெரிந்த விடயம்தான், தனது இரசிகர் மன்றத்தினரையே, மற்றயை இரசிகர் மன்றங்களில் இருந்து வேறுபடுத்தி, நற்பணி இயக்கமாக, இரத்த தான முகாம் போன்ற நல்ல விடயங்களில் ஈடுபடுத்தியவர்.

இப்படியாக, தன்னை வாழ்கையில் ஒரு எடுத்துக்காட்டாக கொண்டு ஒரு இளம் சமுதாயம் வளர உள்ள நிலையில், தனது தாய் மொழிக்கும், கலாச்சார பண்பாடுகளுக்கும் எதிரான கருத்துக்களை கூறுவது தவிர்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இது எனது மிகவும் தாழ்மையான வேண்டுகோள்.

//இதையே துக்ளக் ஆசிரியர் சோ அல்லது அரசியல்வாதி சுப்பிரமணியசுவாமி போன்ற யாராவது ஒருவர் சொல்லியிருந்தால், நாம் கவலையடைய தேவையில்லை//

இதானே வேணாங்கிறது? உதாரணத்திற்கு வேற ஆளே கிடைக்கலயா?!

//அந்துமணியையும் இதில் சேர்த்திருக்கலாமே.//
என்னது..?! அன்புமணியையும் சேர்க்கணுமா?! அதுவும் சரி தான்..! ஓ..அந்துமணியா?! ஸ்பெல்லிங் மிஸ்டேக் தானே?!

டோண்டு-சார் சும்மா அனுபவிச்சு எழுதியிருக்கீங்க...!?

This is getting more and more ridiculous. The 4th comment above is given in my name after creating a new blogger identity. It leads to http://bramin.blogspot.com
If you click the blog title in that URL, it leads to my regular blog.
I am sure I saw some other name when I saw this comment sometime back.
This is a sure way of destroying the trust in the blogging world.
I can only hope that this madness will stop.
By the way, my original blogger number is 4800161, whereas the number of the misleading blogger is 9267865. I request the fellow bloggers to remember that such a thing can happen to anybody else.
Regards,
N.Raghavan

The same thing has happened in Mugamoodi's two blogs as well. Some mad fellow is at large. I reproduce Mugamoodi's comments in this connection in http://mugamoodi.blogspot.com/2005/05/blog-post_18.html
"யாருக்குமே தெரியாது என்றாலும் நீ என்ன சிந்திப்பாய், என்ன செய்வாய் என்பதுதான் நீ 'உண்மையிலேயே' யார் என்பதை கண்டுபிடிக்க எளிய வழி என்று ஒரு ஞானி சொல்லியிருக்கிறார். நகைச்சுவையாக எழுதப்பட்ட பதிவு இது. சம்பந்தமே இல்லாமல் ஒரு தனி மனிதனை பற்றி கேவலமாக பின்னூட்டம் இட்டு துர்வாசர் என்பவர் திசைதிருப்பும் வேலையை ஆரம்பித்தார். பின்பு பாப்பான் என்ற பெயரிலும் அதனை தொடர்ந்தார். அது hackingல் முடிந்திருக்கிறது... துர்வாசர் இப்பொழுது தன் வெற்றி குறித்து மிகவும் மகிழ்ச்சியில் இருப்பார்.... வெற்றிக்களிப்பில் குதூகலமாக சிரித்துக்கொண்டிருக்கலாம்... துர்வாசர் உங்கள் வீட்டில் கண்ணாடி இருந்தால் அதன் முன் நின்று சிரித்துப்பாருங்கள்.... பெருமையக இருக்கிறதா... எனில் உங்களுக்கு உடனடி தேவை ஒரு மாறுதலான வாழ்க்கை முறை... அட்லீஸ்ட் சிறிது காலத்துக்காவது... குழந்தைகளின் சிரிப்பை ரசிக்கப்பாருங்கள்... காலையில் முடிந்தால் கடற்கரை பக்கம் போய் வாருங்கள்... நகைச்சுவை படங்கள் பாருங்கள்... கண்ணியை ஒரு வாரத்துக்கு மூட்டை கட்டி வையுங்கள்... நீங்கள் தற்போது பார்க்கும் வேலையில் ஒரு படி முன்னேற உங்கள் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்துங்கள்.... எல்லா குற்றவாளியும் யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்ற எண்ணத்தில்தான் குற்றத்தை ஆரம்பிக்கிறார்கள். கண்டுபிடிக்காத குற்றங்களின் விழுக்காடு மிக மிக குறைவு என்பதை நினைவில் கொள்ளுங்கள்... ஒருவரை துன்பப்படுத்தி அதன் மூலம் மகிழ்ச்சி கொள்ளும் sickest mentality (ஸாடிஸ்ட் மனோபாவம்) மனிதனை மனிதன் என்ற நிலையில் இருந்து கீழிக்குகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்... என் திருப்திக்காக இதையெல்லாம் சொன்னேன்.... சிந்தித்துப்பார்ப்பதும் பார்க்காததும் உங்கள் நோயின் தீவிரத்தை பொறுத்தது.

illegitimate பின்னூட்டங்கள் அனைத்தையும் அழித்துவிட்டேன்... எதிர்கால தேவையை மனதில் கொண்டு linkஐ அழிக்கவில்லை. பின்னூட்டங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பபற்று இருப்பது நெருடலாக இருந்தாலும் நன்றாகவே இருக்கிறது."

//தமிழ் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் எதிராக, வெளிப்படையாக இப்படி சொல்லத்தான் வேண்டுமா என்ன?//
தமிழ் பண்பாடு ? தமிழ் பண்பாடுகள்ன்னு நீங்க நினைப்பதையெல்லாம் ஒரு லிஸ்ட் போடுங்கள் ஐயா, "உங்கள்" தமிழ் பண்பாடுகளை கொஞ்சலம் அலசி பார்க்கலாம்.

Post a Comment